Monday, May 3, 2010

காற்றில் கரையும் ஓவியங்கள்


எப்பொழுதாவது போன் பேசும்போதும்
gtalk ஓர்குட்டில் உன் பெயர் பார்க்கும்போதும்

காற்றில் அலையும் சிறகு
ஓவியம் வரைவது போல்

உன்னை காணாத கண்கள்
உன் முகம் வரைகின்றன

எத்தனை முறை வரைந்தும்
காற்றிலேயே கரைக்கின்றேன் உன் முகத்தை

முகம் மறந்தவன் நானா
முகம் மறைத்தவன் தான் நீயா

என் கண்கள் வரைந்து கொண்டே
தேடும் உன் முகத்தை

உன்னை காணும் வரை
உன்னை காணும் வரை




சந்திக்காமலே என் எண்ணங்களை ஆக்கிரமிக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் .....