Tuesday, August 17, 2010

ஏதோ ஒன்று

எந்த எண்ணங்களும் இல்லாத ஏதோ ஒரு நிலையில் நான்

ஏதோ ஒன்று தூண்டியது எதையோ எழுத

எதற்கு என்று தெரியாமலே

ஏதோ ஒன்றை யோசித்தபொழுது

என் மனம் கேட்டது

ஏதோ ஒன்று சொன்னதற்காக இப்படியா என்று

ஆம் என்று சொல்லி விட்டு மூழ்கினேன்

எதை எழுதுவது என்று என ஏதோ ஒரு யோசனையில்

ஏதோ ஏதோ எழுதினேன்

அந்த ஏதோ ஒன்று சொன்னதற்காக

எழுதி முடித்து பார்க்கையில்

ஏதோ ஒன்று எழுதப்பட்டு இருந்தது

அந்த ஏதோ ஒன்றிடம் கேட்டேன்

எப்படி இருக்கிறது என்று

அது சொன்னது ஆம்

ஏதோ ஒன்றை ஏதோ எழுதி இருக்கிறாய் என்று

ஏதோ ஒன்றை எழுதி முடித்த மனம்

எதற்கோ தயார் ஆகிக்கொண்டு இருந்தது

அது எதற்கு தயாரானது தெரியுமா

அந்த ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க