எந்த எண்ணங்களும் இல்லாத ஏதோ ஒரு நிலையில் நான்
ஏதோ ஒன்று தூண்டியது எதையோ எழுத
எதற்கு என்று தெரியாமலே
ஏதோ ஒன்றை யோசித்தபொழுது
என் மனம் கேட்டது
ஏதோ ஒன்று சொன்னதற்காக இப்படியா என்று
ஆம் என்று சொல்லி விட்டு மூழ்கினேன்
எதை எழுதுவது என்று என ஏதோ ஒரு யோசனையில்
ஏதோ ஏதோ எழுதினேன்
அந்த ஏதோ ஒன்று சொன்னதற்காக
எழுதி முடித்து பார்க்கையில்
ஏதோ ஒன்று எழுதப்பட்டு இருந்தது
அந்த ஏதோ ஒன்றிடம் கேட்டேன்
எப்படி இருக்கிறது என்று
அது சொன்னது ஆம்
ஏதோ ஒன்றை ஏதோ எழுதி இருக்கிறாய் என்று
ஏதோ ஒன்றை எழுதி முடித்த மனம்
எதற்கோ தயார் ஆகிக்கொண்டு இருந்தது
அது எதற்கு தயாரானது தெரியுமா
அந்த ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க