Wednesday, September 1, 2010

நிசப்தம்

நிலவுக்கு என்ன வெட்கமோ
அடிக்கடி மேகத்தில் ஒளிகிறது
மேகத்திற்கு என்ன படபடப்போ
காற்றோடு காற்றாக ஓடுகிறது


காற்றுக்கு என்ன பரபரப்போ
மரத்தை வேகமாக தழுவி நகர்கிறது
மரத்திற்கு என்ன பயமோ
பீதியில் உறைந்து நிற்கிறது
பசிக்கு என்ன உக்கிரமோ
என் வயிறு கபகபன்னு எரிகிறது
யாருக்கு என்ன குறையோ
எங்கிருந்தோ முனகல் சத்தம்
என்ன என்று நிதானித்தால்
எதுவும் புலப்படவில்லை
மனதின் சோகங்களும்
மாலையின் மழை துளிகளும்
கண்ணீராக சொரிந்தன
மரத்தின் அசையா இலைகளில் இருந்து

என்ன ஆச்சு என் இப்படி
என்றேன் மரத்திடம்
மரம் சொன்னது
நாளை என்னை வெட்ட போறாங்க
ஏதோ புதுசா பாலம் கட்டப் போறங்களாம்
நிசப்தத்துடன் வார்த்தை இன்றி நான்