Wednesday, November 18, 2009

தொடக்கப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி

பொதுவாக 4 வது 5 வது படிக்கும்போது தான் நம்ம வாழ்க்கைல புதுசா நிறைய கத்துக்குவோம் .. அதுல ரெண்டு முக்கியமானது சைக்கிள் மற்றும் நீச்சல் கத்துகிறது .

இந்த வயசு பயலுக சைக்கிள் ஒட்டுரேன்னு சொல்லி தெருவல போறவங்கள மிரள வைப்பானுங்க .. அந்த சைக்கிள் உயரம் கூட இருக்க மாட்டானுங்க . அந்த "பெடல்" கூட எட்டாது . ரெண்டு காலையும் உள்ளார விட்டு கிட்டு வேகம் போறதுல அவன்களுக்கு ஒரு மகிழ்ச்சி . இந்த வயசுல இதுல ஏறபடுற மன தைரியம் தான் அவனுக்கு பின்னால ரெம்ப உதவுது . அப்புறம் சும்மா நிக்கிற சைக்கிள்ள ஏறி உக்காந்துகிட்டு சைக்கிள் ஓட்டுறது .

அப்புறம் நீச்சல் . இந்த வயசுல பெரிய பசங்கள பார்த்து பொறமைபடுற விடயம் இந்த நீச்சல் . நம்மள குளிக்கும் போது கரையவோ படியவோ பிடிச்சு நீச்சல் அடிக்க சொல்லிட்டு நீச்சல் தெரிஞ்சவனுங்க அலப்பரய கொடுப்பானுங்க .. நமக்கு எப்போடா உள்ளே குதிச்சு நீச்சல் அடிப்போம்னு இருக்கும் .. இந்த நேரத்தில சில குரூப் கிணத்துல குளிப்பானுங்க . அவனுங்க நம்மள கூட்டிட்டு போய் கிணத்துல தள்ளி விட்டு அங்கேயும் ஒரு வழிய அடிக்க வச்சுரவாங்க . அப்புறம் என்ன காலைல ஒரு குளியல் , மதிய சாப்பட்டுக்கு அப்புறம் ஒரு குளியல் (சில நேரம் சாப்பிடாமலே ) , சாயும்காலம் ஒன்னு .

இது தவிர கிராமத்து மற்றும் சிறு நகரங்களில் வாழும் இந்த பசங்க விளையாடும் விளையாட்டுகள் அதிகம் .
கண்ணாமூச்சி , கிரிக்கெட் , கோலி , சில்லங்குச்சி , கபடி இன்னும் பிற

நகரத்தில் உள்ள பசங்களுக்கு இதுவும் போச்சு .

No comments:

Post a Comment