Thursday, November 12, 2009

பணம் மட்டும் தான் வாழ்க்கையா ???

பணம் மட்டும் தான் வாழ்க்கையா ???

பொதுவாக எனக்கும் எனது நண்பர்களுக்கும் பணம் பற்றி பெரிய விவாதமே அவ்வபோது எழுவது உண்டு .

பணத்தை பற்றி எனது எண்ணம் " பணம் என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒன்று . ஆனால் பணத்தால் எல்லாவற்றையும் பெற முடியாது . உதாரணத்துக்கு உண்மையான அன்பு , கனிவான உபசரிப்பு மற்றும் பல " .

ஆனால் என் நண்பர்கள் சொல்லுவது " பணம் தான் முக்கியம் . பணத்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் . பணம் இல்லை என்றால் நம்மை விட்டு நண்பர்கள் உறவினர்கள் கூட பிரிந்து விடுவார்கள் "

இப்படிப்பட்ட நண்பர்கள் , உறவினர்கள் நம்முடன் இருப்பதை விட நம்மை விட்டு பிரிந்து போவது நல்லது . அவர்களுக்காக நாம் ஒன்றும் வருத்தப்பட வேண்டியது இல்லை என்பது என் எண்ணம் ..

"ஒரு மனிதன் தனது துயரத்தில் தான் உண்மையான மனிதர்களை அறிகின்றான் " என்று சொல்லப்படுவது உண்டு .

எனக்கு மாசற்ற அன்பின் ஆழத்தை உணர்த்திய நிகழ்வை பகிர விரும்புகிறேன் .

நான் கல்லூரி semester விடுமுறையில் இருந்த நேரம் அது . அப்போ ஒரு கல்லூரி வளாக தேர்வுக்காக திருச்சி சென்று இருந்தேன் . வழக்கம் போல நம்மள over qualified நு சொல்லி விரட்டி விட்டுட்டங்கா . நம்ம லட்சணம் நமக்கு தான் தெரியும் . நான் வீட்டுக்கு வந்தப்ப என் மருமகன் "மனோ " இருந்தான் . அவனுக்கு அப்போ ஒரு 4 வயசு இருக்கும் .

அப்போ என் அம்மா அவன்கிட்ட "மனோ உனக்கு மாமா சாப்பிட்ரதுக்கோ விளையாடுரதுகோ ஒன்னும் வாங்கிட்டு வரலை அப்படின்னு சொன்னாங்க ".
அதுக்கு அவன் சொன்னான் " எனக்கு மாமா வந்ததை போதும் .. அது எல்லாம் வேணாம் ஆச்சி " அப்படின்னு .

இங்கே அந்த அன்பு தான் எனக்கு பெருசா தெரிஞ்சது .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

2 comments:

  1. panamum irundhaal vaazhkai sukhamaaga irukkum aanaal panamey vaazhkaiyaaga irukkakkoodathu enbathu ennudaiya karuththu.

    Nandri.

    ReplyDelete
  2. The world has enough for a man's need but not enough for a man's greed.

    ReplyDelete