Tuesday, August 17, 2010

ஏதோ ஒன்று

எந்த எண்ணங்களும் இல்லாத ஏதோ ஒரு நிலையில் நான்

ஏதோ ஒன்று தூண்டியது எதையோ எழுத

எதற்கு என்று தெரியாமலே

ஏதோ ஒன்றை யோசித்தபொழுது

என் மனம் கேட்டது

ஏதோ ஒன்று சொன்னதற்காக இப்படியா என்று

ஆம் என்று சொல்லி விட்டு மூழ்கினேன்

எதை எழுதுவது என்று என ஏதோ ஒரு யோசனையில்

ஏதோ ஏதோ எழுதினேன்

அந்த ஏதோ ஒன்று சொன்னதற்காக

எழுதி முடித்து பார்க்கையில்

ஏதோ ஒன்று எழுதப்பட்டு இருந்தது

அந்த ஏதோ ஒன்றிடம் கேட்டேன்

எப்படி இருக்கிறது என்று

அது சொன்னது ஆம்

ஏதோ ஒன்றை ஏதோ எழுதி இருக்கிறாய் என்று

ஏதோ ஒன்றை எழுதி முடித்த மனம்

எதற்கோ தயார் ஆகிக்கொண்டு இருந்தது

அது எதற்கு தயாரானது தெரியுமா

அந்த ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க

7 comments:

  1. விசு பாணியில் கவிதையிருக்கிறது. அடுத்த வாசிப்பு தேவைப்படுகிறது

    ReplyDelete
  2. ஏதோ ஒன்றை, ரொம்ப நாட்கள் கழித்து எழுதி இருக்கிறீர்களே!
    :-)

    ReplyDelete
  3. ஏதோ ஒன்னு சொல்லலாம்னு வந்தேன். ஹாம் நல்லா இருக்கு

    ReplyDelete
  4. ரொம்ப நாளாச்சு மீன்ஸ்.. நலமா?

    கவிதை ரசித்தேன். ;)

    ReplyDelete
  5. நல்லா இருக்கிறேன் பலா .
    வருகைக்கு நன்றி சித்ரா அக்கா , பின்னோக்கி
    புலி உங்களின் மக்கள் நலன் சார்ந்த எழுத்துக்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

    ReplyDelete
  6. ஏதோ ஒன்றை எழுதியிருக்கிறீர்கள். அந்த எதோ ஒன்றை நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதியிருக்கிறீர்கள் என்பதும் தெரிகிறது.

    ReplyDelete
  7. ஹாஹாஹா... என்னாச்சு. இப்படித்தான் எல்லாரும் எழுதி இடத்தை அடைத்து வைக்கிறோங்கிற மாதிரி ஒரு உணர்வு... இலக்கில்லாத எழுத்து.

    ஏதோ நானும் சொல்ல வாரேன் என்னாது... :)

    ReplyDelete