Wednesday, February 17, 2010

காற்றில் அலையும் மகரந்தம்

தேடித் தேடி சலித்து விட்டது
ஆனாலும் தேடி கொண்டே இருக்கிறேன்

ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு தேடல்
ஓவ்வொரு தேடலிலும் ஒன்றை காண்கின்றேன்

அந்த ஒன்றில் உன்னை காண முடியவில்லை
அந்த ஒன்று எங்கு இருக்கிறது என்று தெரியா

முடிவற்ற பயணத்தில் முடியா புதிர்களையும்
அவிழ்க்கும் மன திடத்துடன்


காற்றில் அலையும் மகரந்தம் போல்
உன்னைத் தேடி அலைகின்றேன்

உன்னை அடைந்து என் எண்ணக் கரு
முழுதாக எத்தனை நாள் ஆகுமோ

ஆனால் எதுவும் தெரியா என் எண்ணக் கரு
அண்டம் முழுதும் பரவி நிற்கிறது

ஒரு பாதி இல்லாமல் குறைப் பாதியாக
அகத்துள் நீ உறைந்தும்

வழி தெரியா படகாக பயணிக்கிறேன்
உன்னை தேடி என்னை மறந்த நான்

10 comments:

  1. காற்றில் அலையும் மகரந்தம் போல்
    உன்னைத் தேடி அலைகின்றேன்

    உன்னை அடைந்து என் எண்ணக் கரு
    முழுதாக எத்தனை நாள் ஆகுமோ

    ..........அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //ஒரு பாதி இல்லாமல் குறைப் பாதியாக
    அகத்துள் நீ உறைந்தும்

    வழி தெரியா படகாக பயணிக்கிறேன்
    உன்னை தேடி என்னை மறந்த நான்//

    வரிகள் அருமை...

    ReplyDelete
  3. காற்றில் அலையும் மகரந்தம் போல்//

    அந்த உவமை நல்லாருக்கு... எங்கோ எடுத்திட்டுப் போறமாதிரி இருந்துச்சு கடைசியில 'உள்'முகமாக்கிட் கவிஜாவை.

    ReplyDelete
  4. மிக நல்ல கவிதை.முடித்த விதம் மிக நல்ல அழகு..வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

    ReplyDelete
  5. /உன்னை அடைந்து என் எண்ணக் கரு
    முழுதாக எத்தனை நாள் ஆகுமோ

    ஆனால் எதுவும் தெரியா என் எண்ணக் கரு
    அண்டம் முழுதும் பரவி நிற்கிறது

    ஒரு பாதி இல்லாமல் குறைப் பாதியாக
    அகத்துள் நீ உறைந்தும்

    வழி தெரியா படகாக பயணிக்கிறேன்
    உன்னை தேடி என்னை மறந்த நான்//

    வழி தெரியா படகு..:) நல்லா இருக்கு நண்பா

    ReplyDelete
  6. Mapla.... ennada ?? unnoda paathaiyilum yethaavathu poo poothirukka ?

    chozhar parambarayil oru MLA :)

    ReplyDelete
  7. @சமரன் பூ எல்லாம் ஒன்னும் இல்லை .. சும்மா தோனுச்சு அப்படியே போட்டாச்சு ...

    நன்றி புலி , சித்ரா , தெக்கி அண்ணே , கமல் , சங்கவி

    ReplyDelete
  8. மீன்.. வர வர உன் போக்கே சரி இல்ல.. சுந்தர் சொல்ற மாதிரி எதாச்சும் பூ பூத்துச்சா? இல்ல பல்பு எதாச்சும் எரியுதா?.. நல்ல எழுதிருக்கே..

    ReplyDelete
  9. டேய் ஜான் நான் எழுதின அர்த்தம் வேற . பூவும் பூக்கவில்லை பல்பும் எரியலை .

    ReplyDelete