Friday, November 13, 2009

தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன குறிப்பாக ஈழ தமிழர்கள்

தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன குறிப்பாக ஈழ தமிழர்கள்

முதலில் தமிழர்களாகிய நாம் உலக அளவில் ஒரு அமைப்பை அரசியல் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு ஏற்படுத்த வேண்டும் . அந்த அமைப்பு பொது மக்களிடம் பண வசூல் செய்து நிதி ஆதாரங்களை உருவாக்க வேண்டும் .
அந்த நிதி கொண்டு உலகெங்கும் உள்ள தமிழர்களை கொண்டு பல தரப்பட்ட தொழில்களில் இறங்க வேண்டும் . தொழில் மட்டும் அல்லாமல் பள்ளி , கல்லூரி அமைத்து தமிழர்களுக்கான வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் . இந்த அமைப்பு நடத்தும் நிறுவனங்களில் தமிழ் உணர்வினை பெருக்க வேண்டும் .

இந்த உலக அமைப்பு வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண துணை நிற்க வேண்டும் .. அதற்காக தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் குழு அமைக்க வேண்டும் .

இந்த உலக அமைப்பு தமிழர்களுக்காக உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த நண்பர்களை ஏற்படுத்த வேண்டும் .அதன் மூலம் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த உரிமைகள் பறி போக விடாமல் தடுக்கலாம்

இது தவிர ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்விற்கு பல திட்டங்கள் செயல் படுத்த வேண்டும் .

தற்போது உள்ள நிலைமையில் இந்த மாதிரி ஒரு அமைப்பை ஈழ தமிழர்கள் தான் ஆரம்பிக்க முடியும் .பின்பு தமிழக மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழர்களை இணைத்து கொள்ளலாம் .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

2 comments:

  1. துல்லியமான எண்ணம்.

    ReplyDelete
  2. உங்களோட பதிவுகள் எல்லாம் எனக்கு ரெம்ப பிடிக்கும் ...
    வருகைக்கு நன்றி

    அன்புடன்
    மீன்துள்ளி செந்தில்

    ReplyDelete