Thursday, December 17, 2009

மழையோடு மழையாக



மழையில் நனைந்து தண்ணி
சொட்டச் சொட்ட

பேருந்தில் ஏறினேன்
உற்சாகத்துடன்

வழக்கம் போல் தலை குனிந்த
தாமரையாய் என் தேவதை

காத்து இருந்து பூத்த
என் விழிகள்

புன்னகை சொரிந்தன
அவளை நோக்கி

அதிசயமாக என்னை
ஆழ ஊடுருவி

அவள் விழிகள்
என்னை நோக்கின

ஆஹா அடித்தது காதல் பரிசு
இது என் மனது

பேருந்து நிலையத்தில் அவள் அப்பன்
கிடா மீசையுடன்

பேருந்தை விட்டு இறங்கியதும்
ஓட்டம் பிடித்தேன்

அடிப்பாவி இதுக்குத்தான்
இந்த தூண்டிலா என்று

மழையோடு மழையாக
நொந்து கொண்டே

14 comments:

  1. அதிசயமாக என்னை
    ஆழ உடுருவி

    அவள் விழிகள்
    என்னை நோக்கின
    ...........கவனம் அண்ணே........... கவனம்...........
    நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  2. Arumaiyaana kavithai... unga kathai kavithai ellathulaiyume oru nall nagaisuvai ilaiyoduhtu... continue pannunga VaazthukkaL...

    ReplyDelete
  3. ஹஹஹ... இதெல்லாம் சகஜமுங்க... இதுக்குப்போய் பயந்தா எப்புடி.

    நல்லாருக்கு

    ReplyDelete
  4. மழைக்கு முன்னாடி நடந்த விவகாரம் என்னாங்க??? ::)))

    ReplyDelete
  5. இதெல்லாம் பாத்த‌ முடியுமா பாஸ்
    எது ந‌ட‌ந்தாலும் ஓட‌க் கூடாது ஓகே

    ReplyDelete
  6. @ நாஞ்சில் பிரதாப் , க‌ரிச‌ல்கார‌ன்

    ரெண்டு பெருகும் அனுபவம் அதிகம் போல ... நான் கொஞ்சம் பயந்தவன் ,. இப்போ தைரியமா இருக்கு நீங்க ரெண்டு பேர் துணைக்கு இருக்கிறதால்

    ReplyDelete
  7. @ பலா பட்டறை

    என்ன பெரிசா நடந்து இருக்க போகுது வழக்கம் போல விடமா வெறிச்சு பாக்கிறதுதான்

    ReplyDelete
  8. ரொம்ப நல்ல இருக்குங்க..

    ReplyDelete
  9. ரசிக்கும்படி இருக்கு கவிதை...

    ReplyDelete
  10. ஜெட்லி என்னங்க இது அநியாயமா இருக்கு .. நான் கவிதை எழுதின மட்டும் எல்லோரும் இப்படி கேக்குறீங்க

    நன்றி கமலேஷ் ,பூங்குன்றன்.வே

    ReplyDelete
  11. //ஜெட்லி என்னங்க இது அநியாயமா இருக்கு .. நான் கவிதை எழுதின மட்டும் எல்லோரும் இப்படி கேக்குறீங்க//

    காதல் கவிதை எழுதினாலே அப்படிதான் செந்தில்..

    கவிதை அழகு தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  12. நன்றி மலிக்கா .. உங்கள் அதரவுக்கு ..

    யோவ் ஜெட்லி உம்மை அப்புறம் கவனிக்கிறேன்

    ReplyDelete
  13. இதுகெல்லாம் பயந்தா எப்படி பாஸ்?? காதல்னா சும்மாவா...

    ReplyDelete