Thursday, December 24, 2009

ஆட்டு குட்டியாக

உன் தலையில்
புல்லு கட்டுடன்

உன் கையில்
ஆட்டு குட்டியுடன்

வரப்பில் நீ
உன் ஒய்யார நடையுடன்

நான் என் மனதில்
காதலுடன்



அந்த ஆட்டு குட்டியாக
ஏங்கினேன்

அதுவும் நடந்தது

என் தலையில்
புல்லு கட்டுடன்

கயிறு இல்லாத
ஆட்டு குட்டியாக

உன் முன்னால்
நான்

நீ பின்னால் உன்

ஒய்யார நடையுடன்


புகைப்படம் : மீன்துள்ளி செந்தில்

6 comments:

  1. புல்லுக் கட்டைக் கட்டுவதுபோல் என் மனத்தைக் கட்டினாய்..
    கயிறில்லாத ஆட்டுக் குட்டியாய் உன் பின்னால் என் மனம்...
    (உங்க கவிதைல எங்கள் விஷமம்...!)

    ReplyDelete
  2. ஸ்ரீராம் கலக்குறீங்க போங்க

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க மீன்ஸ் ::))

    ReplyDelete
  4. //உன் முன்னால்
    நான்

    நீ பின்னால் உன்

    ஒய்யார நடையுடன்
    //

    ஆஹா..,

    ReplyDelete
  5. என்ன சொல்றதுன்னு தெரியல செந்தில்....

    ReplyDelete