Monday, December 28, 2009

என் நண்பனின் காதல்

என் நண்பனின் காதல்

சந்திரன் என் அறை நண்பன் . பய ஒரு பொண்ணை காதலிச்சிட்டு இருந்தான் .. அந்த பொண்ணும் தான் இவனை காதலிச்சது ..

எப்போ பாத்தாலும் SMS அனுப்பிகிட்டு இருப்பான் .. நாங்களும் அவன் கிட்டே கேப்போம் " மச்சி எப்படிடா லவ் பண்றது அப்படின்னு" ..அவன் எதவது அடிச்சு விடுவான் . எங்க அறைல வேற யாரும் லவ் பண்ணலை.. அவன் தான் காதல் மன்னன் எங்களை பொறுத்தவரை ..

சனி ஞாயிறு லீவ்ல பய அந்த பொண்ணு கூடத்தான் சுத்திகிட்டு இருப்பான் .எங்கேடா போற அப்படின்னு கேட்ட அவள பாக்க போறேன் அப்படின்னு தான் சொல்லுவான் எங்கே போறான்னு சொல்லவே மாட்டான் ..

அப்ப ஒரு புது படம் ஒன்னு ரிலீஸ் ஆச்சு ..படம் நல்ல இருக்குனு சொன்னங்க .. வாடா நாம எல்லோரும் சேந்து நைட் show போகலாம் அப்படின்னு கேட்டோம் .. இல்லை மச்சி நான் அவ கூட matinee show போறேன் . நீங்க போயிட்டு வாங்கடா அப்படின்னு வழிஞ்சான் .

நாங்களும் "சரி நமக்கு தான் யாரும் இல்லை..அவனுக்குத்தான் ஆள் இருக்கு அப்படின்னு " வேற எதுவும் பேசலை .அவன் வழக்கம் போல பந்தாவா கிளம்பினான் .



எனக்கு தாம்பரத்தில ஒரு வேலை இருக்குடா , நான் நேர படத்துக்கு வந்துடுறேன் அப்படின்னு சொல்லிட்டு நான் கிளம்பினேன் .

தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் போன அங்கே நம்ம சந்திரன் நின்னுகிட்டு இருந்தான் .என்னை பாத்ததும் சந்திரன் ஒரு தூணுக்கு பின்னாலே ஒளிஞ்சான்.
நான் கொஞ்சம் குழம்பி போய் "எதுக்கு இவன் இப்போ ஒளியுறான் , ஒரு வேலை அவன் காதலி மொக்கை பிகர இருக்குமோ " அப்படின்னு யோசிச்சேன் .. அவன சுத்தி எந்த பொண்ணும் இல்லை ..நாம விடுவோமா ...


ஒளிஞ்சவனை பிடிச்சு என்னடா படத்துக்கு போரேன்னு சொல்லிட்டு இங்கே இருக்கே அப்படின்னு கேட்டேன் ..

அதுக்கு அவன் சொன்னான் " இல்லைடா ..பசங்க கிட்டே நான் சொல்லுறதை சொல்லிடதடா .. எனக்கு காதலி எல்லாம் யாரும் இல்லை .. சும்மா ஒரு "build up" கொடுக்க அப்படி சொன்னேன்" .

நான் கேட்டேன் "அப்புறம் அந்த SMS ,படத்துக்கு போறது எல்லாம் .. " . அதுவாடா நாங்க மொத்தம் 3 பேர் . எங்களுக்கு ஊர் சுத்துறதுல தான் விருப்பம் .சென்னை வந்து ஒரு build up கொடுக்கணும் அப்படின்னு முடிவு பண்ணினோம் .. அதுக்காக இந்த திட்டம் போட்டோம் . எங்க மொபைல் நம்பரை எதவது ஒரு பொண்ணு பேர்ல வச்சுக்குவோம் .எங்களுக்கு உள்ளே நாங்க sms பண்ணிக்குவோம் .. சனி ,ஞாயிறு எங்கேயாவது போய் சுத்திட்டு வீட்டுக்கு திரும்பிருவோம் " அப்படின்னு சொன்னான் .

அவன் சொல்லி முடிக்க அவன் நண்பர்கள் வந்து சேந்தாங்க .அட பாவிகளா " ஒரு டீமா தான் இது எல்லாம் பண்றீங்களா" அப்படின்னு வாயில ஒரு பெரிய வடையவே போற மாதிரி வாய புளந்து ஆச்சரியமா கேட்டேன் .

நான் சரி நீ அறைக்கு வா பேசிக்கலாம் அப்படினேன் .


அவன் என் கைய பிடிச்சிகிட்டு " மச்சான் ரூம்ல மட்டும் சொல்லிடதடா ..நீ என்ன சொல்லுறிய அதை கேக்குறான்டா " அப்படினான் ..

இப்போ நமக்கு ராஜவாழ்க்கைதான் போங்க .அடிக்கடி ஹோட்டல் விருந்து , கேக்குறப்ப எல்லாம் கடைல ஜூஸ் , இளநி வாங்கி கொடுக்கிறான் . எப்பாவது ஊருக்கு A /C ரயில் இல்லேன்னா பேருந்து .


படங்கள் : மீன்துள்ளி செந்தில்

6 comments:

  1. அனுபவி ராசா, அனுபவி...........

    ReplyDelete
  2. உண்மை கதை சூப்பர் செந்தில்....

    ReplyDelete
  3. "கண்மணியே...காதல் என்பது கற்பனையோ...."

    ReplyDelete
  4. டேய் இதை பார்த்தா உன்னோட ரூம் மேட் கதை மாதிரி தெரியலயே.. நீ தான் அந்த பையனா?

    ReplyDelete
  5. ஆகா அற்புதமாய் இருக்குங்க.. உண்மையில் இந்த பில்டப் தேவைதானா???? ஆனாலும் ஊர் நண்பர்கள் கூட சுத்துறது றொம்ப ஜாலியா இருக்கும்.. ம்ம்ம்

    ReplyDelete